கர்த்தாவே உமது கிருபையினால்
karthaavae umadhu kirubaiyinaal
கர்த்தாவே உமது கிருபையினால் காலமெல்லாம் என்னை காத்தருளும்
1. உமது செட்டை நிழலினிலே எமது ஆத்மா மகிழ்கின்றது தேவனே உமது கிருபைகளை எண்ணி எண்ணி துதிக்கிறேனே
2. மனிதர் என்னை தூற்றும் போது மார்பில் என்னை அணைத்தாரே இயேசுவே நீரே பெரியவர் என்று எண்ணி எண்ணி துதிக்கிறேனே
3. வஞ்சகன் வலையில் வீழ்ந்துவிடாமல் வாழ வைத்தீர் உம் தயவால் இயேசுவே உந்தன் காருண்யங்கள் எண்ணி எண்ணி துதிக்கிறேனே
4. அழைப்பில் உறுதியாக அனுதினமும் ஆண்டவரோடு வாழ்ந்திடவே இயேசுவே உந்தன் அற்புதங்கள் எண்ணி எண்ணி துதிக்கிறேனே
5. ஊழிய பாதையில் சோர்ந்திடாமல் உண்மையாக வாழ்ந்திடவே இயேசுவே உந்தன் வருகையின் நாளை எண்ணி எண்ணி துதிக்கிறேனே