கண்ணீரை சிந்துங்களேன்
kanneerai sindhungalen
கண்ணீரை சிந்துங்களேன் - சிலுவை பாதையிலே கண்ணீராய் மாறும் - நம் பாவங்கள் எல்லாம் கண்ணீரை போக்கும் இயேசுவின் நாமம் பாவத்தின் நெஞ்சங்களே
1 குருடர்கள் எல்லாம் விழி கிடைத்து குருவாய் உன்னை நினைப்பாரே (2) திருடர்கள் எல்லாம் மனம் மாறி சிலுவையில் கண்ணீர் வடிப்பாரே (2) வஞ்சகம் வந்து தலை கவிழ்ந்து உம்மை வணங்கிடுமே தஞ்சமென்று வந்தாலே போதும் தாமே அருளும் கிடைக்கும்
2. வண்டு வந்து தேன் குடிக்க பாரில் மலருண்டு (2) விளையும் பயிர்கள் வளர்ந்து தழைக்க வானத்து மழையுண்டு (2) தீமை வந்து எனை அழிக்க சீரழியும் நேரம் தஞ்கமென்று சென்றாலே போதும் தாமே அருளும் கிடைக்கும்