கண்ணீர் துளிகள் கலைந்திடுதே
kanneer thuligal kalaindhidudhae
கண்ணீர் துளிகள் கலைந்திடுதே உம்மைக் காணும் ஒரு நொடியில் நெஞ்சமெல்லாம் மலர் ந்திடுதே உம்மை நினைக்கும் ஒரு நொடியில்
இயேசுவே நீர் போதுமே இயேசுவே எப்போதுமே இயேசுவே நீர் வேண்டுமே இயேசுவே எந்நாளுமே
கீழே விழுந்த என்னையுமே தோளில் தூக்கி சுமந்து கொண்டீர் வெறுக்கப்பட்ட என்னையுமே வேண்டும் என்று அணைத்துக் கொண்டீர்
கல்வாரியின் அன்பினையே காட்டிடவே நீர் இறங்கி வந்தீர் உந்தன் அழகையும் இழந்து விட்டு என்னை அழகாக மாற்றி விட்டீர்