கன்மலையானவரே
kanmalaiyaanavarae
கன்மலையானவரே என்னை காத்திடும் தெய்வம் நீரே கடும் புயலின் அலைகளிலும் காக்க வல்லவரே கடும் புயலின் அலைகளிலும் காக்க வல்லவரே (2) இயேசுவே, என் நேசரே உம்மையே என்றுமே நம்புவேன் (2)
செங்கடலின் நடுவே நடத்திச் சென்று அக்கினியும் மேகஸ்தம்பம் தந்து (2) ஏலிமின் சோலையில் மகிழச் செய்த கன்மலையின் நீரூற்றே என் இயேசுவே (2) இயேசுவே, என் நேசரே உம்மையே என்றுமே நம்புவேன் (2)
காற்றையும் கடலையும் அதற்றி என்னை கடல் மேல் நடந்திடச் செய்தவரே (2) சூழ்நிலைகள் கண்டு மூழ்கும் என்னை கரம் நீட்டி காப்பாற்ற வருபவரே (2) இயேசுவே, என் நேசரே உம்மையே என்றுமே நம்புவேன் (2)