கண்டேன் தேவ மகிமையை கண்டேன்
kanden deva magimaiyai kanden
கண்டேன் தேவ மகிமையை கண்டேன்: கண்கள் மலர மகிமை அடைந்தேன் - மனம்
1. மனிதர்கள் மகிமை வாடப் போகின்றதே மண்ணில் வளர்கின்ற பசும்புல்லைப் போ வாடிடாக் கிரீடம் மங்கிடா மகிமை. வந்தென்னைச் சந்திக்குதே என்றும்
2. மூடும் திரைச்சீலை கிழிந்ததால் மா பரிசுத்த ஸ்தலம் அதைக் கண்டேன், பரிசுத்த ஆவி விடுதலை ஈந்தார் பறந்திட பலம் அருள்வார் தூய
3. பரம தேவ தரிசனம் தோன்றிடுதே பரமானந்தம் இதயத்தில் பொங்க மகிமை உயர் கிருபை பெருக மா பெலன் இறங்கிடுதே - தேவ
4. கேபார் இதெக்கேல் நதியோரத்தில் கண் கண்ட தரிசனம் போல வானம் திறந்து தூதர் பறந்து தானம் பொழிகின்றனர் - நல்ல
5. கேருபீன்கள், சேராபீன்கள் எழும்பிக் கர்த்தர் மகிமை சுமந்து பறந்து பரிசுத்தர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று பாடித் துதிக்கின்றனர். - அவர்
6. பூலோகத்துப் பிரபுக்களும் கண்டிராத மேலகத்தின் மகிமையைக் கண்டோம், பாலகர் வாயில் பேதைகள் நாவில், பாடிடும் துதி அளித்தார் - சிறு
7. கோடா கோடி தூதர் களோடொரு நாள் கர்த்தர் மேகத்திலே வருவார் பக்தர்களின் பருமனைக் காணப் பறந்தங்குச் சேர்ந்திடுவேன் - திரள்