கண் சிமிட்டும் நட்சத்திரம்
kan simittum natsathiram
கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும் கண்டிராத நட்சத்திரம் வழியாக வந்தவரை காணவே வழிகாட்டிச் செல்லும் நட்சத்திரம்
ஞானியர் கண்டு அதிசயித்தார் யூத ராஜன் பிறந்தாரென்று ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் தாவீதின் ஊரின் சத்திரத்தில் அங்கு ஏமாற்றம் அடைந்தார் அத்தாரகை நின்றிடவே தாழ்மையின் கோலத்தில் மன்னவனை மாட்டுத் தொழுவினில் கண்டனரே
பொன் வெள்ளைப்போளம் தூபம் தந்து தூய பாலனை பணிந்தனரே பரிசுத்த ராஜனை பணிந்து நின்று மா பாக்கியம் அடைந்தனரே உலகெல்லாம் இயேசுவை கண்டிடவே வழிகாட்டுவோம் வாருங்கள் இயேசுவுக்காய் பிரகாசிக்கும் நல் பாக்கியம் பெற்றிடுவோம்