கல்வாரியின் காட்சியை
kalvaariyin kaatsiyai
1. கல்வாரியின் காட்சியை காண்பீரோ காண்பீர் கஸ்திகளடைந்துமே ஜீவன் தந்தாரே பாவ பாரம் ராகம் யாவும் போக்கவே உம் இயேசுவே தாகமாய் தீர்ந்தார் குருசின் மீதிலே
அழைக்கிறார் இதோ (2) இயேசுவல்லாது புவியியல் வேறு புகலிடமுண்டோ
2. இன்னமும் அழைக்கிறார் தாமதம் செய்வது அன்பரின் கிருபையின் வாசல் மூடுதே உந்தன் ஜீவன் மீட்பு கொள்ள என்ன ஈடு செய்வீர் இந்த நாள் நேரம் சிந்தை செய்வீர் - அலை
3. நெஞ்சம் நொந்து வாடியே சஞ்சலம் கொண்டோரே மிஞ்சும் ரோகத்தாலே நீர் நொந்துமே மாள்வதேன் தஞ்சம் இயேசு உந்தன் பேர்க்காய் ஏற்றாரே தழும்புகள் கெஞ்சுதல் கேட்பவரே அஞ்சி நிற்பதேன் - அழை
4. இயேசுவின் நற்செயல் மாறவே நீருமே நேசமாய் தம் தூதுகள் கேட்க செய்வாரே பெந்தெகொஸ்தின் ஆவியாலே ஜீவன் உம்மிலே பாயவே சந்திப்பார் சந்ததம் வந்திடுவீர் - அழை
5. ஆதி காலம் போலவே ஜொலிக்க வரங்களும் ஆதி சபை போலவே ஒலிக்க ஜெபங்களும் இயேசுவின் வருகையும் சமீபாகும் காலமே சேர்ந்திட சேவையில் சேர்ந்து வாருமே- அழை