கைகளால் பெயர்க்கப்படாத
kaigalaal peyarkkappadaadha
1. கைகளால் பெயர்க்கப் படாத பெரும் கல்லொன்று உருண்டோடுதே உலகத்தை நியாயம் தீர்க்க யூத சிங்கம் இறங்கினாரே
ஆனந்தம் நான் பாடிடுவேன் உள்ளம் பொங்குதே பூரிப்பாலே ஆத்மநாதர் தேடி வந்தார் என்னை அழைத்து சென்றிடவே
2. பக்தன் நோவாவின் நாட்களிலே தேவன் மனுவுரு எடுத்தாரே பேழையின் கதவை அடைத்து அவ பக்தரை அழித்தாரே
3. மின்னலை போல கிழக்கிலே தோன்றி பிரகாசித்தார் மேற்கினிலே மேகம் சூழ அக்கினி கண்கள் இடி முழக்கத்துடன் வந்தார்
4. சந்திரனை மனிதன் அடைந்தான் மணவாட்டியை தேவன் சேர்த்தார் இக்கட்டில் நாம் தப்பிடுவோமே சாகாமை எனதுரிமை