கடைசி காலம் தான்
kadaisi kaalam thaan
கடைசி காலம் தான் இது கடைசி காலம் தான் ஏசு ராஜா வருகிறார் ஆயத்தப்படுங்க
1. மனிதரின் அன்பு எல்லாம் மாறிப் போகுதே மளிதரின் செயல்கள் எல்லாம் மாறிப் போகுதே நன்மைக்கு பதிலாக தீமை தான் செய்வாங்க இது தான் கடைசி காலமே
2. பரிசுத்தம் இல்லாமல் மனிதன் வாழ்கின்றான் பக்தியின் வேஷத்தையே தரித்துக் கொள்கின்றாள் தூற்றி திரிகின்றவள் இன்னும் கொஞ்சம் சொல்லட்டுமே இதுதான் கடைசி காலமே
3. குஷ்டரோகி பத்துபேர் ஏசுவிடம் வந்தாங்க கஷ்டங்கள் மாறியே சந்தோஷமாய் போனாங்க ஒருவன் மாத்திரம் நன்றி சொன்னானே மற்றவர் யாவரும் மறந்தே போனாரே ! அன்பையே மறந்து போனாங்க ஏசுவின்
4. உலகத்தில் காண்பதெல்லாம் மாயை மாயையே உலகத்தின் செல்வமெல்லாம் அழிந்துபோகுமே ராஜாவின் வேலையை சீக்கிரம் செய்திடுவோம் பரலோக ராஜ்ஜியத்தில் ஆட்களை சேர்த்திடுவோம் ராஜாதி ராஜா வருகிறார் சந்திக்க ஆயத்தப்படு
5. ராஜாதி ராஜா ஏக சீக்கிரமாய் வருகிறார் நியாயாதிபதியாக நியாயம் தீர்க்க வருகிறார் உத்தமன் யார் என்று அன்றைக்கு தெரியுமே நீதிமான் யார் என்று அன்றைக்கு புரியுமே ராஜாதி ராஜா வருகிறார் சந்திக்க ஆயத்தப்படு