காட்டில் கலங்கித் திரியும் பரதேசி
kaattil kalangith thiriyum paradhesi
1. காட்டில் கலங்கித் திரியும் பரதேசி காதுக்கோர் இனிய செய்தி அதிசீக்ரம் வருவார் யேசு வருவார் அதிசீக்ரம் ராஜ்யம் சேர்வோம்.
பல்லவி
ஆம் வாறார் வாறார் மகிமையோடும் மாட்சியோடும் மேகமீதில் பக்தர்களைக் காத்து ஆட்சி செய்திட பக்தர் மனம் களிகூர்ந்திட.
2. பாசி படிந்து உறங்கும் கல்லறைகள் வான் பேரோசையில் திறக்கும். ஆழியில் ஆழிந்திட்டவர் உயிர்த்திடுவார். பூமியில் மீண்டும் வாழ்வாரே.
பல்லவி
ஆம் வாறார் வாறார் மகிமையோடும் மாட்சியோடும் மேகமீதில் பக்தர்களைக் காத்து ஆட்சி செய்திட பக்தர் மனம் களிகூர்ந்திட.
3. ஏதேன் இழந்த சோலை மாளிகை பெற ராஜன் முன் கூடிப் பணிவர் நான்கு திசையிலிருந்து மீட்கப்பட்டோர் மீட்பின் இன்ப கானம் பாடி.
பல்லவி
ஆம் வாறார் வாறார் மகிமையோடும் மாட்சியோடும் மேகமீதில் பக்தர்களைக் காத்து ஆட்சி செய்திட பக்தர் மனம் களிகூர்ந்திட.
4. ஜெய் பாடுவோம் கீதம் ஆமென் அல்லேலூயா சேர்வோம் சீக்ரம் தேவ ராஜ்யம் விழிப்புடன் வாஞ்சையுடன் இருந்திட்டால் முடி சூட்டி மகிமையில்.
பல்லவி
ஆம் வாறார் வாறார் மகிமையோடும் மாட்சியோடும் மேகமீதில் பக்தர்களைக் காத்து ஆட்சி செய்திட பக்தர் மனம் களிகூர்ந்திட.