காப்பார் உன்னை என்றென்றும்
kaappaar unnai endrendrum
காப்பார் உன்னைஎன்றென்றும் வழுவாமலே இம்மட்டும் காத்தார் இம்மானுவேலாய் இன்னமும் காத்திடுவார்
கோழி தன் குஞ்சுகளை கூவி அழைக்குமாப்போல் என்னைத் தம் சிறகுகளால் அணைத்துக் காத்திடுவார்
கண்ணீ ர் கவலையுடன் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் கர்த்தரின் நாமத்தினால் மதிலைத் தாண்டிடுவேன்
சோதனை சோர்வுகளில் சோர்ந்திடாமல் காக்கிறார் நெரிந்த நாணல் முறியாத தேவன் நிமிர்த்தி உயர்த்திடுவேன்
இவ்வுலகப் பாடுகள் என்னை என்ன செய்திடும் நல்ல போராட்டம் போராடி நானே ஒட்டத்தை முடித்திடுவேன்
ஆனந்த கீதங்களால் ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா பாடுவேன் அன்பரின் நாமத்தினால