கானல் நீரும் தன் வேடங்கள்
kaanal neerum than vedangal
பல்லவி
கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும் காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே
பல்லவி
சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அனுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
1. கேடகமாய் என்னை சுற்றிலுமே தேவன் நீர் அரணானீர் வேடன் அம்போ என்மீதென்றுமே பாயாமல் அழித்திடுவீர்
பார்வோன் சேனையோ அல்லேலூயா ஆழி ஆழத்தில் அல்லேலூயா பாலாக் சதியோடும் அல்லேலூயா ஆசீர்வதித்தீரே அல்லேலூயா
2. பேதைகளையும் ஞானிகளாய் மாற்றீடும் வல்லவர் நீர் நான் அறியாததும் ஓ... எட்டாததும் தேவன் நீர் அறிவிப்பதால்
ஆகாத கல்லோ அல்லேலூயா மூலை தலைக்கல்லே அல்லேலூயா தோற்றே போனாலும் அல்லேலூயா தேவன் நம்மோடே அல்லேலூயா
பல்லவி
சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும் அனுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை
பல்லவி
கானல் நீரும் தன் வேடங்கள் மாற்றும் காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே
நிகரில்லாத நீர் எந்தன் உறவானீரே இதை அறியாமல் தொலைவானேனோ என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை