காலங்கள் கடந்து போனதே
kaalangal kadandhu ponadhae
காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2) உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே - (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே - (2) ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே - (2) நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன் நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் - (2) மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே - (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே - (2) பாலைவனத்தில் நீரூற்றினீர் சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் - (2) தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே - (2) சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன் இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை - (2) தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால் தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் - (2) எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே - (2) கானானின் தேசத்தின் அன்பான தேவனே இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து