காலையில் துதிப்போம்
kaalaiyil thudhippom
காலையில் துதிப்போம் - களிப்புடனே மிக கருத்துடனே காவலன் இயேசுவை கனிவுடன் தாமே
கண்ணின் கருமணிபோல - கர்த்தர் எண்ணி நம்மைக் காத்துக் கொண்டார் புண்ணியனைப் போற்றிப் புகழ்ந்து மேதாமே
ஆயுசின் நாட்களோடொன்றை நீண்ட ஆயுசுள்ளோர் கூட்டித் தந்தார் ஆயுள் உள்ளமட்டும் ஆண்டவர் அவரை
பாலைவனத்தின் நீரோடை - போல காலையிலேயவர் கிருபை ஓலையில் உள்ள தம் வாக்குகள் பெறவே
தகித்திட அக்கினி ஆவி - நம்மை சகித்திட கிறிஸ்து ( உ ) க்குள்ளாகி சகித்திட சகலமும் சக்தி தந்தவரை
ஒப்புவிப்போம் ஒன்றுகூட முற்றும் துப்புர வாக்கித் தந்திட அப்புறமாகிட தப்புகள் யாவும்
ஆண்டுக்கொள்ள இந்த நாளில் - காலை வேண்டுவோமே முழங்காலில் ஆண்டவர்க்காயிரம் ஸ்தோத்திரம் செய்தே