காதல் காதல் காதல்
kaadhal kaadhal kaadhal
காதல் காதல் காதல் இயேசுவே உம்மேல் காதல் இயேசுவே உம்மேல் காதல் கொண்டேனே .
1. என் மணவாளன் நீரே நீர் வர காத்திருப்பேனே அணையாத தீபம் ஏந்தி வந்தேனே வரும் நேரம் அறியேனே எதிர்கொள்ள விழித்திருப்பேனே நானும் உம் பின்னால் வருவேனே அழகே வேண்டும் புறாவே சாரோன் ரோஜாவே பள்ளதாக்கின் லீலி மதிலே என் உயிரான நேசர் நீர் தானே என் சுவாச காற்றே நீர் தானே அன்பே தேவ குமாரா அன்பே தேவ குமாரா .
2. என் மன வாசல் நின்று கதவை தட்டும் போது உமக்காய் என் இதயம் திறந்தேனே முன்னே நீர் வரும் போதும் எனக்குள் எல்லாம் மாறும் புரியாத இன்பம் உணர்ந்தேனே சாரோன் ரோஜாவே பள்ளதாக்கின் லீலி மதிலே என் உயிரான நேசர் நீர் தானே என் சுவாச காற்றே நீர் தானே அன்பே தேவ குமாரா அன்பே தேவ குமாரா