ஜீவாதிபதி ஜோதியே
jeevaadhibadhi jodhiyae
1. ஜீவாதிபதி, ஜோதியே பக்தரின் இன்ப யேசுவே, லோகில் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்.
2. பாதம் சேர்ந்தோரை மீட்பீரே; இவ்வுண்மை என்றும் மாறாதே; தேடுவோர்க்கு நீர் நல்லவர் பற்றுவோர்க்குச் சம்பூரணர்.
3. விண் அப்பம் உம்மில் ருசிப்போம் முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்; நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே.
4. மாறிடும் வாழ்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்; உம் அருள் பார்வை இன்பமே, விஸ்வாசிப்போர்க்குப் பாக்யமே.
5. தங்கும் எம்மோடு யேசுவே, எக்காலும் ஆற்றித் தேற்றுமே; காரிருள் பாவம் ஓட்டுமே, உம் தூய ஜோதி வீசுமே.