ஜீவ நதியின் தெளிந்த
jeeva nadhiyin thelindha
ஜீவ நதியின் தெளிந்த நீரோடை போல் கல்வாரியின் இரத்தம் பாய்ந் தோடடுதே என் வாழ்வில் என்றும் அமைதியே
1.கர்த்தர் என் பெலனும் கேடகமாய் கருத்துடன் காத்திட அழைத்ததால் கண்ணீர் கவலை நீங்கிடவே களிப்பின் ஊற்றாய் மாற்றினீரே.
2.இயேசுவின் கரத்தின் கருவியாய் நன்மை செய்ய அழைத்ததால் வழுவாது வல்லமை வசனங்களை வானவர் தந்து மாற்றினீரே.
3.சிலுவை சிந்தனை ஞானமாய் சிறந்த விளங்க அழைத்ததால் பழுதில்லாத உம் பலன்களை பரத்தில் சேர்க்க மாற்றினீரே.
4.சபையின் மேன்மை சாட்சியாய் சத்தியம் சொல்ல அழைத்ததால் சந்தோஷ நதியின் வாஞ்சையை நாடெங்கும் பரப்ப மாற்றினீரே.
5.சீயோனின் சிறந்த சிகரமாய் செழித்து வளர அழைத்ததால் எக்காளம் தொனிக்கும் நேரத்தில் மறுரூபமாக மாற்றினீரே.