இயேசப்பா நீர் செய்த அதிசயம்
iyesappaa neer seydha adhisayam
இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே உந்தன் அன்பை நினைத்து துதிப்பேன் உந்தன் செயல் நினைத்து துதிப்பேன் எந்தன் உள்ளம் பொங்கத் துதிப்பேன் இயேசுவே உம்மைத் துதிப்பேன் உயிரே உயிரே எந்தன் இயேசுவே உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்
ஒரு வார்த்தை சொன்னீரே இந்த உலகமே உருவானது உம் வார்த்தைகள் எல்லாம் அதிசயமானதே உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே
உலகினை மீட்கவே நீர் மனிதனாய் உருவானீரே உம் செயல்கள் எல்லாம் அதிசயமானதே உந்தன் அன்பும் அதிசயமானதே
என் வாழ்க்கை பயணத்திலே வழி காட்டும் எங்கள் தெய்வமே உம் பாதைகள் எல்லாம் அதிசயமானதே நீரே எந்தன் அதிசய தெய்வமே