இருளிலிருந்து வெளிச்சத்திற்க்கு
irulilirundhu velicchathirkku
இருளிலிருந்து வெளிச்சத்திற்க்கு என்னை அழைத்தவரே பாவம் மன்னித்து மாபெரும் இரட்சிப்பை எனக்கு தந்தவரே - (2)
அதிகாலை உந்தன் சமுகம் வாஞ்சிப்பேன் எனக்கது இன்பம் உந்தன் வார்த்தையை தியானம் செய்வேன் உந்தன் நோக்கத்திற்க்காய் வாழ்வேன் - (2)
1.உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் ஒரு வழியாய் வரும் எதிரிகள் ஏழு வழியாய் ஓடிப் போவாா்கள் -(2) என்ற நம்பிக்கை எந்தன் வார்த்தையிலே அதினால் என்றும் ஜெயிப்பேன் வாழ்க்கையிலே - (2)
2.உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை உள்ளங்கைகளில் உன்னை வரைந்தேன் உன்னை நான் என்றும் மறப்பதில்லை - (2) செடி உம்மில் என்றும் நிலைத்திருப்பேன் நான் கொடியாய் வாழ்ந்து கனிகொடுப்பேன் -(2)
3.கிருபை உனக்கு போதும் நீயும் ஆசிர்வாதமாய் இருப்பாய் மலைகள் விலகும் பா்வதங்கள் அகலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாதே - (2) என் நீயோ கீழாகமாட்டாய் என்றவரே என்னை மேலாக உயா்த்திய நல்லவரே - (2)