இருளா இருந்தேன்
irulaa irundhen
இருளா இருந்தேன் மறைவில் வாழ்ந்தேன் தேடி வந்து காதலிச்சீங்க எதையும் நீங்க எதிர்பார்க்காம கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க
அன்பே என் பேரன்பே உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே உயிரே உயிர்த்தவரே முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே
1.பாரம் தாங்காம விழுந்த என்ன சிலுவை பாரத்தால் தாங்குனீங்க ! குறைகள் எல்லாம் நினைக்காமலே கருணையாலே மன்னீச்சீங்க ! எனக்கெதிரான எழுத்தை எல்லாம் அழித்தது உங்க அன்பே ஐயா பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்
2.கைகளில் ஆணி அடிச்ச போதும் என நினைச்சா நீங்க தொங்குனீங்க ! கேலி அவமானம் நிந்தைகளை எனக்காகவா நீங்க தாங்குனீங்க ! மகிமையால் என்னை முடிசூட்டவே சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா நிகரே இல்லா அன்பே-இருளா இருந்தேன்