இறைவன் நமது வானகத் தந்தை
iraivan namadhu vaanagath thandhai
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை குறைகள் தீரும் கவலைகள் மாறும் குழம்பிய மனதில் அமைதி வந்தேறும் இறைவன் நமது வானகத்தந்தை
பறவைகள் விதைப்பதும் அறுப்பதுமில்லை பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை ( 2 ) மறந்துவிடாமல் அவைகளுக்குணவு - 2 வாரி வழங்கிப் பேணியே காக்கும் - 3
வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள் வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை ( 2 ) மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2 மன்னனும் என்றும் உடுத்தியதில்லை