இராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்
iraajaa varugiraar endhan nesar varugiraar
இராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் மேகமீதினில் என்னை சேர்த்துக் கொள்ளுவார்
1. ஆனந்த சத்தத்தோடு செல்லுவேன் ஆர்ப்பரித்து சாத்தானை வெல்லுவேன் துன்பங்கள் நீங்கியே இன்பங்கள் நல்கியே விண்ணவர் மார்பினில் சாய்ந்துகொள்ளுவேன்
2. இரட்சண்ய தலைச்சீராவை தந்தவர் ஆவியின் பட்டயத்தை அளித்தவர் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொண்டு நாளுமே சாத்தானை வெல்ல பெலன் நாளும் தந்தவர்
3. கிருபையின் நாட்களில் வாழ்ந்திடும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளா மாந்தரே காலமும் செல்லுதே தாமதம் செய்யாதீர் இரட்சகராம் இயேசுவின் பாதம் சேருவீர்
கர்த்தரின் நாமம் பெரிது என்றும் பக்தர்கள் போற்ற வல்லது