இந்நேரம் வந்து என்னைச் சுத்தம்
inneram vandhu ennais sutham
இந்நேரம் வந்து என்னைச் சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் தேவா சுத்தம் செய்யும்
பாவ துக்கமெல்லாம் நீங்கிடவே நீங்கிடவே சுவாமி நீங்கிடவே
உள் வினை யாவையுமே போக்கிடவே போக்கிடவே சுவாமி போக்கிடவே
உன் வாக்கை நம்பி நான் இப்போ வாரேன் இப்போ வாரேன் சுவாமி இப்போ வாறேன்
கல்வாரி ஜீவ ஆறு ஓடிப்போ ஓடிப்போ எனக்காய் ஓடுதிப்போ
இயேசுவின் இரத்தத்தினால் சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் தேவா சுத்தம் செய்யும்