இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
indrum endrum maaridaadha yesuvae
இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே ஜீவனீந்திரல்லோ அன்பினால் திவ்ய வாக்கு தத்தம் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும் சௌக்யமீந்திடும் நான் நம்பி வந்தேனே
2. அன்பினால் சகேயுவை அழைத்துமே அன்று இரட்சிப்பளித்திட்டீரே இன்று யான் பெறவே உம்மாறிடா சந்தோஷமே நின் கிருபையாலே நிறைந்திடுவீரே – இயேசு
3. ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே தேகமதில் காயமேற்றீரே என்னை சுகமாக்க நின் வன் கரத்தை நீட்டியே நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
4. வாவென்று அழைத்த வல்ல சத்தமே லாசரை உயிர்ப்பித்ததுவே என்னை உயிர்ப்பித்த அவ்வல்ல வாக்குரைத்துமே நின் கிருபையாலே நிறைந்திடுவீரே – இயேசு
5. யாவுமெனக்காய் முடித்த இயேசுவே யாருண்டு இப்பாரில் உம்மைப்போல் உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட நின் கிருபையாலே பூரணனாக்கிடும் – இயேசு