இந்த வேளை வரவேணும்
indha velai varavenum
இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா இந்த வேளை வரவேணும் என் துயரம் தீர வேணும் சந்தைக் காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா .
1. மெத்தவே துயரமாகிறேன் வெயிலைக் கண்ட மெழுகு போல உருகி வாடுகிறேன் கர்த்தனே கடாட்சம் வைத்து காட்சி தர வாருமையா சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசு நாதா
2. பத்து தலை கோபுரங்களால் பொன்னால் செய்த பளிங்கு மா மணி மண்டபங்கள் அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை இயேசு நாதா
3. கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல ஆவியே அருளும் ரட்சகா பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க தேவ நதியால் செய்யும் சீயோன் மலை இயேசு நாதா