இந்த நாள் வரை என்னைக்
indha naal varai ennaik
இந்த நாள் வரை என்னைக் காத்திட்ட எந்தன் கன்மலை நீரே இப்போதும் எப்போதும் என்னை சுமக்கும் தகப்பன் நீரே
உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா நீர் நல்லவர் அல்லேலூயா நீர் மிகவும் நல்லவர்
உண்மையில்லா திருந்தேன் என்னைத் தூக்கி சுமந்தீரே பாவங்களை மன்னித்து மகிழ்ச்சியாய் மறந்தீரே
ஒன்றுமில்லா திருந்தேன் நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால் தேவைகளை சந்தித்து மீதம் எடுக்க வைத்தீர்
வியாதியாய் இருந்தேன் குணமானேன் தழும்புகளால் வார்த்தையை அனுப்பி என்னை வாழவைத்தீரே