இன்பக் கனவொன்று நான் கண்டேன்
inbak kanavondru naan kanden
இன்பக் கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் ( 2 )
1. இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக்கண்டேன் பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன்
2. அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் - சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன் நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் - 2 நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் அன்பின் நிறைவை நான் கண்டேன்