இன்ப இயேசுவையே தினம்
inba yesuvaiyae thinam
இன்ப இயேசுவையே தினம் துதித்திடுவேன் புகழ்பாடி மகிழ்ந்திடுவேன் இனிமை சுகமே அளித்தார் அவரை பண்பாடி வாழ்த்திடுவேன்
கோரத்தின் எல்லை புயலினில் பேரலை வீசும் கடலினில் ( 2 ) மாளும் பாவி என்னைத் தூக்கி தோளில் தாங்கி கரை சேர்த்தார் ( 2 ) மகிபன் அருளின் வடிவாம் அவரை மகிழ்வாகப் பாடிடுவோம் ( 2 )
மாந்தர்கள் கைவிட்டவேளைதனில் மாமன்னர் என்னை சேர்த்துக் கொண்டார் ஜீவரத்தமதால் மீட்டார் தூயரத்தமதால் மீட்டார் மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில் மகிழ்வாகப் பாடிடுவோம்
வானக வேந்தன் என்றென்றுமே வாழ்ந்திட தந்தேன் என் உள்ளமே வானதுதர் போல நானும் வாழ்வு காண வாக்கு தந்தார் வருவார் அழைப்பார் வானகம் செல்வேன் வல்லோரை வாழ்த்திடுவோம்