இளவயதும் வாலிபமும் ஆசைகளும்
ilavayadhum vaalibamum aasaigalum
இளவயதும், வாலிபமும், ஆசைகளும், வருவது என்றும் மாயை - 2 இருதயத்தின் நினைவுகள் என்றும் மாயை,- 2 மாம்சத்தின் உணர்வுகள் என்றும் மாயை, உலகத்தில் நடப்பது எல்லாம் மாயை- 2- இளவயதும்..
மாயை எல்லாம் மாயை என்று, ஞானி சொன்ன வார்த்தை அன்று சூரியன் கீழ் எல்லாம் மாயையே, சாலமோனின் வாழ்வும் மாயையே- 2 ஒரு மூடன் ஒரு ஞானி இவர் வாழ்வும் மாயையே, பணக்காரன் பரதேசி இவன் வாழ்வும் மாயையே - 2 - இளவயதும்..
காலமுண்டு நேரமுண்டு, ஒவ்வொன்றுக்கும் சமயமுண்டு, தேவன் அன்று நேர்த்தியாய் செய்தார், காலம் அறிந்து யாவையும் செய்தார்-2 நிழல் போல, வரும் வாழ்க்கை, அதன் நாட்கள் மாயையே அதன் ஜீவன் சுக தேகம் பெலன் எல்லாம் மாயையே-2 - இளவயதும்..
கர்த்தருக்கு பயந்து நின்று அவர் வழியில் நடந்து சென்று கற்பனைகள் பத்தும் கை கொண்டு, உத்தமனாய் வாழ விரும்பு-2 அவர் தெய்வம் அவர் அன்றி ஒரு மீட்பும் இல்லையே அவர் இயேசு உனக்காக யாவும் செய்து முடிப்பாரே -2 - இளவயதும்..