இலவசமாய் கிருபையினால்
ilavasamaay kirubaiyinaal
இலவசமாய் கிருபையினால் என்னை நீதிமானாக்கினீரே நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது அப்பா உம் கிருபைதானே நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா
1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன் தேடி வந்தீரய்யா ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும் ஒருநாள் அறிவை தந்தீரய்யா கீழானதையல்ல மேலானதை நாடு என்று சொன்னீரய்யா (நன்றி(2) ஐயா…)
2. பாவத்தின் கறைகளால் நிறைந்த இவ்வுலகில் பரிசுத்தம் தந்தீரய்யா பாவத்தை எதிர்க்க ஒவ்வொருநாளும் பெலனை தந்தீரய்யா காண்கின்ற உலகமல்ல காணாத பரலோகம்தான் உனக்கு என்றீரய்யா (நன்றி(2) ஐயா…)
3. என் சுயநீதியெல்லாம் அழுக்கான கந்தை உணர செய்தீரய்யா அழுக்கு உடை அகற்றி அழகான வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா மானத்தை காத்திடும் உன் வஸ்திரம் காத்திடு என்று சொன்னீரய்யா (நன்றி(2) ஐயா…)