இதுவரை நீ இழந்ததெல்லாம்
idhuvarai nee izhandhadhellaam
இதுவரை நீ இழந்ததெல்லாம் நூறத்தனையாய் திருப்பிகொள்வாய் முந்தினதை நீ யோசிக்க வேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் இறைவன் இயேசு உண்டே கலங்கிட வேண்டாம்
துன்பம் ஓன்று வரும் போது உன் சாபம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே துன்பம் கண்டு துயரடையாதே இறைவன் இயேசு உண்டே
தோல்வி ஓன்று வரும் போது உன் பாவம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே தோல்வி கண்டு துவண்டுபோகாதே இறைவன் இயேசு உண்டே
பயந்திடும் நிலை வரும் போது எதிரி பெலத்தை நினைப்பதென்ன துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார் சூழ்நிலை கண்டு பயந்து போகாதே இறைவன் இயேசு உண்டே