இதயம் தூய்மையோடு
idhayam thooymaiyodu
இதயத் தூய்மையோடு- எங்கள் இயேசுவை நீ பாடு மனதில் நீங்கும் துன்பம் துயர் நீங்க வந்த தங்கம் இயேசு யூத ராஜ சிஙகம்
வானத்திலும் பூமியிலும் மகிமையுள்ள தேவன்- இயேசு வார்த்தையோடு மாமிசமாய் வந்த நல்ல யூதன் வாக்குகளைத் தந்து நம்மை காக்கும் நல்ல நாதன் தம்மில் வாஞ்சையுள்ள அடியவராய் மனந்திருப்பும் நேசன்
புதியதொரு வாழ்வைத் தர இயேசுவிடம் கேளு- இந்த மனித வாழ்வின் நடைமுறைக்கு வழிவகுத்தவர் யாரு தினமுமவர் நாமத்தினால் தரிசனங்கள் கூறு-இயேசு மனந்திரும்பு என்று மட்டும் சொல்லுகிறார் பாரு
அன்பு கூர்ந்து மனுக்குலத்தை மீட்க வந்த நாதன்-இயேசு ஆவியிலே தரிசனமாய் உயிர்த்தெழுந்த ஜீவன் ஆண்டவராய் அவனியிலே வந்துதித்த பாலன்-இயேசு மீண்டுமொரு தலைமுறைக்கு வரவிருக்கும் தேவன்