எத்தேசத்திலேயும் ப்ரசங்கித்தே
ethesathileyum prasangithe
1. எத்தேசத்திலேயும் ப்ரசங்கித்தே தேவவசன அரிவாள் கொண்டு அறுப்பு ஓயுமட்டும் உழைத்து நற்கதிரைச் சேர்ப்பாருண்டோ இன்று?
கொய்வார் எங்கே? சகாயர் யார்? அவசரமான இந்த வேலை பார் க்ராமந்தோறும் ப்ரசங்கித்தே நற்கதிரைச் சேர்ப்பாருண்டோ இன்றே?
2. புறப்பட்டுப் போய் வழிச்சந்தியில் ஆத்துமாக்களைத் தேடுங்கள் என்றார் மணிகள் ஒன்றுமே தவறாமல் களஞ்சியத்தில் சேருங்கள் என்றார்.
3. எத்திசையிலும் விளைவாகுதே இப்போ தறுத்தால் மிக்க பலனே அறுப்பதிகம் ஆட்களோ கொஞ்சம் தாமதம் செய்தால் பெரும் நஷ்டம் தான்.
4. சகோதரர் யாவரும் வாருங்கள் ஆத்துமாக்களை ஒன்றாய்க் கூட்டுங்கள் ஆண்டவர் யேசு வரும் பொழுது அறுப்பின் ஆனந்தம் அடைவோமே.