எரியுமக்கினி போல் உமதவி
eriyumakkini pol umadhavi
எரியுமக்கினி போல் உமதவி-நீர் சொரிந்திடும் பரனே தினம் தினமாய்
உரைத்திட நாவால் உயிருடன் மொழிகள் சொரிந்திடும் வரங்கள் நிறைந்தொழுகி - இப்போ
1. சிநேக அக்கினி எனில் எரிந்தெழும்பி-பெரு தாகம் ஆத்மாக்கள் மேல் ஓங்கிடவே அன்பின் உரைகளால் கடன் உள்ளம் இனகி வேக மரண பாதை விட்டு விலக-அவர்
2. பலிபீடத்தின் திரு அக்கினியால் என் அதரத்தின் குறைகள் அகன்றிடுமே பலவித நூதன வசனங்கள் உரைக்க பலமான கிருபை பெற்றிடவும்-வரும்
3. உம்மில் அடியேன் பிரகாசித்திட--நான் என்னை முழுவதுமாக வெறுத்து விட்டேன் மன்னவா! எந்தளில் வந்து அவதரித்து வானம் னியால் முற்று கழுவிவிடும் வந்து
4. தேசமெல்லாம் பற்றி எரித்திடவே - உம் தாசரில் அக்கினி முன்டெரிந்து நாச உலகம் தனில் அக்கினிபோல் உப தேசிக்கத் திருநல்வார்த்தைகளை-உப
5. அக்கினி பூவிலிட வந்தவரே -மிக விக்கினம் பெருகுதே பாரும் அதை அக்கினியாய் உமதடியார்கள் எரிந்திட அக்கினி அபிஷேகம் அளித்து விடும் இப்போ