ஏறெடுப்போம் துதி ஸ்தோத்திரங்கள்
ereduppom thudhi sthothirangal
ஏறெடுப்போம் துதி ஸ்தோத்திரங்கள் மாறிடா அழிவில்லா அன்பினிற்கே ஸ்தோத்திரங்கள் துதி பாத்திரர்க்கே காத்திடும் முடிவில்லா அன்பினிற்கே-4
அவரின் நன்மைகள் அவனியோர் அறிய துதித்து நாம் பாடுவோம் மன்னன் வரும் வேளை மண்ணோர் வரவேற்க மகிழ் கொண்டாடிடுவோம் -2 -ஏறெடுப்போம்
வளம் நிறை பூமி மாறும் காலங்கள் வான் மழை சூரியன் படைப்பின் சந்தோஷம் அளித்தெம் உயிர் மூச்சில் கலந்தார் ஸ்தோத்தரிப்போம் -2 -ஏறெடுப்போம்
மண்ணும் அதின் நிறைவும் விண்ணும் அவர் முன்பு மகிழ்வில் திளைக்கட்டுமே கர்த்தர் ஆள்கின்றார் என்னும் முழக்கத்தில் சிருஷ்டி இணையட்டுமே-2 -ஏறெடுப்போம்