என்னைத் தேடி வந்த தெய்வம்
ennaith thedi vandha theyvam
என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)
நன்றி நன்றி ஐய்யா உமக்கு நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா
உள்ளங்கையில் என்னை வரைந்தீர் கருவில் என்னை சுமந்தீர் (2)
1. பாவியான என்னைத் தேடி வந்து உம் இரத்தத்தால் மீட்டீரே (2) என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)
2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும் வலக்கரம் பிடித்து நடத்தி (2) என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)
3. உடைந்து போன என் உள்ளத்தையே உம் மார்போடு அனைத்தீரே (2) என் கண்ணீர் துடைத்து என் காயம் கட்டிய என் யேகோவா தேவனே (2)