என்னை பெயர் சொல்லி
ennai peyar solli
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே என்னை கரம் பிடித்து நடத்தினீரே உருவாக்கி உயர்த்தினீரே-2
ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்
1.வனாந்திரமாய் இருந்த என்னை வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2 என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்
2.கை விடப்பட்டு இருந்த என்னை உம் கரத்தால் நடத்தினீரே-2 என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன் என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்