என்னை நடத்தி வந்தவர்
ennai nadathi vandhavar
என்னை நடத்தி வந்தவர் என்றும் தூக்கிச் சுமந்தவர் தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்டவர் நினைத்துப் பார்க்கின்றேன் நான் நன்றி சொல்லுவேன் அவர் கரத்தை பிடித்து நான் தொடர்ந்து சொல்லுவேன்
நன்றி நன்றி இயேசய்யா நன்றி என் அன்பு இயேசய்யா நெஞ்சமெல்லாம் துதிக்குதய்யா - உம் அன்பை எண்ணி மகிழுதையா
கண்ணீர் சிந்தி கதறும் போது கலங்காதே என்றுரைத்தார் ஆதரவின்றி அழுதபோது அழுகையின் கண்ணீரை துடைத்து விட்டார்
எதிர்காற்று வீசும்போது எனைக் காத்த என் இயேசய்யா இருள் சூழ்ந்த நேரமெல்லாம் அணைத்து ரட்சித்த ஒளி விளக்கே
மனதுருகி என்னை அழைத்து என் மகனே என்றழைத்தீர் காயங்கள் ஆற்றி கவலைகள் நீக்கி கல்வாரி அன்பினால் காப்பவரே
தனித்து நிற்கும் காலங்களிலும் தாங்குகின்ற புகலிடமே திக்கற்ற8 நேரத்தில் தேற்றிடுவீர் சிலுவையின் நிழலினால் நடத்துகின்றீர்