எந்நாளுமே துதிப்பேன் என் நேசரேசுவை
ennaalumae thudhippen en nesaresuvai
எந்நாளுமே துதிப்பேன் என் நேசரேசுவை காலையில் மாலையும் மற்றெல்லா வேளையும் கையையும் நெஞ்சையும் மேலே உயர்த்தினான்
1. பாவங்களை நீக்கி விட்டார் தம் ரத்தத்தை சிந்தி காணாமற் போயினேன் கண்டுபிடித்தனர் தூக்கி சுமந்து தம் மந்தையில் சேர்த்தனர்
2.அன்பின் செருபி அவர் அவ்வன்பை காட்டினார் மாட்டுத் தொழு முதல் தூக்குமரம் வரை ஈனக் கோலம் பூண்டு நிந்தையும் சகித்தார்
3. சாவின் நிழலதிலும் பிசாசினால் வரும் நானே உன் பரிகாரி விலக்குவேன் வியாதியை நோக்கிப்பார் என்னை இரட்சிப்பேன் என்பதால்
4.அளிக்கிறார் நன்மையெல்லாம் ஒவ்வொரு நாளிலும் ஊணும் உடையையும் வேண்டும் பொருளெல்லாம் குறைவின்றி நிறைவாக தந்திடுவதால் நான்
5.பரிசுத்த ஜீவியத்தை இப்பார்தலத்திலே தேவ பயத்தோடு ஊக்கமாய் செய்யவே ஆவியின் ஈவையும் எனக்களித்ததால்
6.வந்திடுவாரே அவர் வெகு சீக்கிரமாக காண்பேன் அவரை நான் சேர்வேன் அவரிடம் அல்லேலூயா பாடிப் பாடிப் போற்றிய
7.வாழுவேன் என்றைக்குமே என் நேசர் பக்கத்தில் புதிய எருசலேம் என் சுய தேசமாம் வானவருடன் நான் ஆனந்தங் கொள்ளுவேன்