ஏங்குகிறேன் இயேசுவே
engugiren yesuvae
ஏங்குகிறேன் இயேசுவே என் அருகில் வாருமே என் சுமையும் போகுமே உள்ளம் சுகமாகுமே பாரமுடன் இயேசுவே உம் முகத்தை பார்க்கிறேன் நல்லவரே இயேசய்யா என் சுமையை போக்குமே
பாவம் சாபமும் யாவும் மாறிப்போகும் உம் பார்வையால் எந்த சோகமும் காற்றை போல ஆகும் உம் வார்த்தையால் உம் முகம் காணா நேரம் பாராமென தோன்றுதே உம் துணை தேடா நேரம் சோர்ந்து மனம் வாடுதே
தாயை போல அணைப்பீர் கண்ணீர் யாவும் துடைப்பீர் தாயும் கூட மறந்தால் என்னை நீரே சுமப்பீர் பேச வாரும் என் தயாளனே என்னை தாங்கும் உம் கரத்திலே மாசில்லாத என் குணாளனே என்னை ஆளும் உம் மனத்திலே பாசத்தால் பாவம் போக்கும் பார்வை உம் பார்வையோ வார்த்தையால் யாவும் ஆக்கும் ஆற்றல் உம் ஆற்றலோ
தேவை யாவும் கொடுப்பீர் உந்தன் நேசம் தருவீர் நானும் பாதை மறந்தால் என்னை தேடி வருவீர் நேசமாகும் உம் நினைவிலே கண்கள் தேடும் உம் உறவினை தேற்ற வாரும் என் குமாரனே என்னை தேற்றும் உம் வரத்திலே நேசத்தால் நோயை போக்கும் காயம் உம் காயமோ வாழ்வினால் சாவை வெல்லும் காலம் உம் காலமோ