எங்கே ஓடுவேன்
engae oduven
1. எங்கே ஓடுவேன்? பாதகன் ஆனேன் தீமை எங்கும் என்னை மூடும், ஆதரிக்க ஆரால் கூடும்? எங்கே ஓடுவேன்? பாதகன் ஆனேன்
2. யேசு சுவாமி, நீர் என்னைக் கூப்பிட்டீர் ஆதலால் உம்மண்டை வந்து அன்புடன் உம்மைப் பணிந்து நிற்கிறேன்; ஆ! நீர் என்னைக் கூப்பிட்டீர்
3. பாவத்தால் உண்டாம் துன்பமே எல்லாம் உம்மால் தீர நீர் மரித்தீர் மாசில்லாத ரத்தம் வீட்டீர்; இவ்விதமாய் நீர் என்னை இரட்சித்தீர்
4. குற்றம் தீயது ஆகிலும் அது நீர் அடைந்த சாவினாலே நீங்கிப் போயிற்றா தலாலே ஏழைப்பாவி நான் நீதிமான் ஆனேன்