எந்தன் பொக்கிஷம்
endhan pokkisham
எந்தன் பொக்கிஷம் நீர்தானையா எந்தன் புகலிடம் நீர்தானையா
இயேசுவே என் இதயத்தில் வாழ்பவரே எந்தன் இதயத்தை ஆள்பவரே
மேகத்தில் வருவீர் வேகமாய் வருவீர் என்னையும் சேர்த்துக் கொள்வீர்
என் கண்ணீர் துடைப்பீர் உம்மோடு இணைப்பீர் மாரநாதா மாரநாதா
உன் முகம் பார்க்கணும் என் கண்கள் பார்க்கணும்
வருகைக்காய் காத்திருப்பேன் சுந்தர ரூபனே என் மணவாளனே மாரநாதா மாரநாதா
ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு இயேசுவே நீர் வரப்போகிறீர்
பரிசுத்தமாகணும் பரிசுத்தமாக்கிடும் மாரநாதா மாரநாதா