எந்தன் இராகம் உம் நாமம்
endhan iraagam um naamam
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட எந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட-2 உங்க அன்பு நினைக்கையில் என் உள்ளம் பொங்குதே உங்க தியாகம் நினைக்கையில் நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம்
1.ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள் ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரே வாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள் வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே-எந்தன் இராகம்
2.சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம் உமது கரம் கொண்டு தாங்கினீரய்யா வாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போது புதிய வழியை காட்டி நடக்க செய்தீரே-எந்தன் இராகம்
3.என்னையே உமக்காக தந்தேன் இராஜா என்னை முற்றிலுமாய் பயன்படுத்துமே சிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர் உம்மோடு வாழ எனக்கு ஆசை இராஜா-எந்தன் இராகம்