என்பாதை வேண்டாமே உம்பாதை காட்டிடும்
enbaadhai vendaamae umbaadhai kaattidum
1. என்பாதை வேண்டாமே உம்பாதை காட்டிடும் தேவா உம் கரத்தால் நீர் என்னை நடத்தும்
2. நீர் காட்டும் பாதையே எவ்வாறும் உத்தமம் நேர் சுற்று ஆயினும் நடத்தும் விண் ஸ்தலம்.
3. என் சித்தம் ஆபத்தாம் உம்சித்தம் நாடுவேன் நான் செல்லும் பாதையே நீர் காட்டக் கெஞ்சுவேன்.
4. நான் தேடும் ராஜ்ஜியம் உம் சொந்தமானதே அங்கென்னைச்சேர்த்திடும் பாதையும் உம்மதே.
5. உம் சித்தப்படிக்கே என் பாத்ரம் எடுத்துச் சந்தோஷம் சஞ்சலம் எதாலும் நிரப்பும்.