எனக்கொரு ஆசையுண்டு என்
enakkoru aasaiyundu en
எனக்கொரு ஆசையுண்டு என் இயேசுவை காண வேண்டும் எனக்கொரு ஆவல் உண்டு நான் அவரோடு பேச வேண்டும்
வையகமே வானகமே எனது ஆசை நிறைவேறுமா
மலையும் காடும் சோலையும் அலைந்தோடும் கடலும் தேடினேன் காணேன் அவரை கதறி அழுதேன் கர்த்தரே வாரும் வாரும் என்றேன்
கரம் ஒன்று என்னைத் தொட்டது என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது வேதம் தந்தேன் தினமும் அதிலே என்னை பார் என மொழிந்தது
தினமும் வேதத்தில் காண்கிறேன் தேவாதி தேவனை துதிக்கின்றேன் ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன் ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்