எனக்காக யாவையும் செய்தீர்
enakkaaga yaavaiyum seydheer
எனக்காக யாவையும் செய்தீர் என்னோடு என்றும் இருக்கின்றீர்
எந்தன் ஆத்தும உம்மை தேடும் எந்தன் இருதயம் உம்மை நாடும்
நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் உந்தன் நன்மைகளை எண்ணி பாடுவேன்
1. புதிய கிருபைகள் தினம் தந்து நன்மையால் நிரப்பினீரே உந்தன் வார்த்தையால் தினம் போஷித்து திருப்தியாக்கினீரே
2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே என்னோடு இருக்கின்றீர் எந்தன் தலையை மேலும் உயர்த்தி ஆசீர்வதித்தீரே