எனையாளும் இயேசு நாதா
enaiyaalum yesu naadhaa
எனையாளும் இயேசு நாதா துணையாக வாரும் தேவா படு பாவியான எம்மை பரிசுத்தமாக்கினீரே கணமேனும் உமது அன்பை மறவாத மனத்தைத் தாரும் இனிமேலும் உமது வழியில் எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்
தாயின் கருவில் எம்மை-நீர் முன்னறிந்து கொண்டதாலே இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர் இறைநாமம் பாட வைத்தீர் நிறைவான ஆசி தந்து எமைக் காக்க வாரும் தேவா
அன்பின் வழியைக் காட்டி அடைக்கலம் தந்ததாலே நன்றியோடு துதி செய்வோம் ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம் மகிழ்வோடு உமது வழியில் களி கூர்ந்து நடந்து வந்தோம்