என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன்
en yesuvai naan endrum thudhippen
என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன் எளிமை ரூபம் எனக்காய் எடுத்தார். என்னையும் யேசு அன்புடன் மீட்டார் எனக்குப் பரம சந்தோஷம் ரூடவ்ந்தார்.
1. எத்தனை தானதர்மங்கள் செய்தும் நித்தமும் பூசை பலி செலுத்தியும் அத்தனையும் நானே செய்து தீர்த்தும் சுத்தமாக்குதில்லை எந்தன் மனதை சுத்தன் யேசுராஜன் திரு ரத்தமோ சுத்திகரித்திடும் சகல பாவமும்.
2. வருத்தப்பட்டுப் பாவ பாரமும் சுமந்தோரை அழைத்திடும் நேசர் நீசன் எந்தனின் ஜென்மப்பாவம் நீடித்திருக்கும் கன்மப் பாவம் நீக்கிவிட்டார் என் பாவம் யாவையும் தள்ளவே மாட்டார் வரும் எவரையும்.
3. முட்க்ரீடமும் அவருக்குச் சூட மோட்ச மெய்ப் பாக்கியம் எனக்குத் தேட ஆணி அவரின் கரங்கால்களில் ஆழ்ந்த காயம் அவர் விலாவில் சிறியேன் எனை ரட்சிக்க இயேசு சிலுவையில் தம் ஜீவனை விட்டார்.