என் வாழ்க்கைப் பயணத்தில்
en vaazhkkaip payanathil
என் வாழ்க்கைப் பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர் என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர் -2
நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம்
என் தகப்பனே, இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவீர் நீரே -2 தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே வாழ்நாள் முழுவதும் சுமந்து காப்பீரே
2. தனிமையில் அழுது தவித்தேன் என்னை நீர் மறந்தீர் என்றேன் தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே
3. உம்மோடு என்றென்றும் வாழ நன்மைகள் சுதந்தரிக்க மாம்சம் ரத்தமும் எல்லாம் தந்தீரே அளவே இல்லாமல் பாசம் வைத்தீரே