என் உணர்வினிலே
en unarvinilae
என் உணர்வினிலே கலந்தவரே என் நினைவினிலே நிற்பவரே என் கனவினிலே வருபவரே என் இதயத்திலே நிறைந்தவரே
உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேனையா இயேசுவே
என் உறவினில் கலந்து தந்தையானீரையா என் வாழ்வினில் இணைந்து தலைவனானீரையா
என் ஆவியில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீரையா
என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரையா